search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித தேவசகாயம்"

    • இன்று 23-ஆம் தேதி 7ம் நாள் திருவிழா நடைபெறுகிறது
    • சிறப்பு நிகழ்ச்சியாக கிறிஸ்து அரசர் கலை குழுவினர் வழங்கும் கண்கவர் கலை நிகழ்ச்சி களும் நடைபெறுகின்றன.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் ,கிறிஸ்து நகர் கிறிஸ்து அரசர், ஆலயத்தில் கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடந்து வருகிறது. நேற்று 6-ம் நாள் திரு விழா நடைபெற்றது. இன்று 23-ஆம் தேதி 7ம் நாள் திருவிழா நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை ,புகழ்மாலை ,திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து மறையுரை நடைபெறுகிறது. அதன் பிறகு இன்று இரவு 9 மணிக்கு குமரி மண்ணில் விழுந்த விதை புனித தேவ சகாயமே என்ற பிரம்மாண்ட வரலாற்று நாடகம் நடைபெறுகிறது. கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல மேடைகளில் பிரபல கலைஞர்கள் இந்த நாட கத்தில் நடிக்க உள்ளனர். நாளை 8-ம் நாள் விழா வில் சிறப்பு நிகழ்ச்சியாக சமபந்தி நடைபெறுகிறது. சனிக்கிழமை 9ம் நாள் திருவிழாவும், இரவு கிறிஸ்து அரசர் தேர் பவனி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    ஞாயிற்றுக்கிழமை 26-ந் தேதி 10ம்நாள் திருவிழா நடைபெறுகிறது. அன்று காலை கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியும் இரவு சிறப்பு நிகழ்ச்சியாக கிறிஸ்து அரசர் கலை குழுவினர் வழங்கும் கண்கவர் கலை நிகழ்ச்சி களும் நடைபெறுகின்றன. ஆயர் நசரேன் சூசை பங்கு பெற்று தலைமை மறையுரை ஆற்றுகிறார்.

    விழா ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர்கள் ,பங்கு பேரவை பொறுப் பாளர்கள் ,உறுப்பினர்கள், மற்றும் பங்கு மக்கள் செய்து உள்ளனர்.

    • ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
    • குழித்துறை மறை மாவட்டம் மாத்திரவிளை மறைவட்ட மக்கள் சார்பில் நடந்தது

    கன்னியாகுமரி:

    குழித்துறை மறை மாவட்டம் மாத்திரவிளை மறைவட்ட மக்கள் சார்பில் புனித தேவசகாயம் மக்கள் திருவிழா நட்டாலத்தில் நடைபெற்றது.

    விழாவையொட்டி நேற்று மதியம் புனித தேவசகாயம் ஆளுமையும் பண்புகளும், நமக்கு விடுக்கும் சவால்களும் என்னும் தலைப்பில் இறையியல் பேராசிரியர் அல்போன்ஸ் கருத்துரை வழங்கினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், தமிழ் மலங்கரை கலை தொடர்பகம் வழங்கிய புனித தேவசகாயமே என்னும் திரைப்படம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் வட்டார முதல்வர் மரிய வின்சென்ட் தலைமையில், திருத்தல அதிபர் றசல்ராஜ் முன்னி லையில் ஆடம்பர திருப்பலி நடை பெற்றது. ஜார்ஜ் பொன்னையா மறையுரை நிகழ்த்தினார்.

    கில்பர்ட் லிங்சன், மரிய அற்புதம், ரொமரிக் ததேயுஸ், இயேசுமரியான், தோமஸ், ஷிஜின், தானியேல் ஆசீர்வாதம், றீகன் மோரீஸ், ஜியோ கிளிட்டஸ், ஜஸ்டின் பிரபு, ஜோவின் ஸ்டீபன் மற்றும் பலர் இணைந்து திருப்பலி நிறைவேற்றினர்.

    மாத்திரவிளை மறைவட் டத்தைச் சேர்ந்த 23 பங்கு களிலிருந்தும் ஆயிரக் கணக்கான இறைமக்களும், புனித தேவசகாயம் பக்தர் களும் இத்திருப்பலியில் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை வட்டார முதல்வர் மரிய வின்சென்ட் தலைமையில் அருட்பணி யாளர்கள் கில்பர்ட் லிங்சன், ஷிஜின், வட்டார மேய்ப்பு பணி பேரவை துணைத்தலைவர் ஜான் கென்னடி, செயலாளர் வக்கீல் மரிய அருள்தாஸ், விழாக்குழு உறுப்பினர்கள் ஜஸ்டின், ஜஸ்டஸ், போஸ், ஜெனோ ரெனிட்டஸ், மரியரெத்தினம் மற்றும் அனைத்து பக்தசபைகள், இயக்கங்கள், அன்பியங்கள், வட்டார அருட்சகோதரிகள் இணைந்து செய்திருந்தனர்.

    • நட்டாலத்தில் நாளை நடக்கிறது
    • மாத்திரவிளை மறைவட்ட மக்கள் சார்பில் ஏற்பாடு

    கன்னியாகுமரி:

    குழித்துறை மறை மாவட்டம் மாத்திர விளை மறைவட்ட மக்கள் சார்பில் புனித தேவசகாயம் மக்கள் திருவிழா நட்டாலத்தில் நாளை (21-ந் தேதி) நடக்கி றது. இதுசம்பந்தமாக மாத்திர விளை மறைவட்ட குருகுல முதல்வர் மரிய வின்சென்ட் மற்றும் நிர்வாகிகள் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-

    குழித்துறை மறை மாவட்டம் மாத்திரவிளை மறைவட்ட மக்கள் சார்பில் புனித தேவசகாயம் மக்கள் திருவிழா நட்டாலத்தில் நாளை (21-ந்தேதி) நடக்கி றது. விழாவை யொட்டி நாளை மதியம் 2 மணிக்கு புனிதரின் பிறந்த பூமியில், புனித தேவசகாயம் ஆளு மையும், பண்புகளும், நமக்கு விடுக்கும் சவால்க ளும் என்னும் தலைப்பில் இறையியல் பேராசிரியர் தே. அல்போன்ஸ் கருத்து ரை வழங்குகிறார். தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், தமிழ் மலங்கரை கலை தொடர்ப கம் வழங்கும் புனித தேவ சகாயமே என்னும் திரைப்படம் வெளியீடு நடைபெறுகிறது.

    பின்னர் வட்டார முதல்வர் மரிய வின்சென்ட் தலைமை யில், திருத்தல அதிபர் றசல்ராஜ் முன்னி லையில் மாபெரும் ஆடம்பர திருப்பலி நடை பெறுகிறது. ஜார்ஜ் பொன்னையா மறையுரை நிகழ்த்துகிறார். கில்பர்ட் லிங்சன், மரிய அற்புதம், ரொமரிக் ததேயுஸ், இயேசு மரியான், தோமஸ், ஷிஜின், தானி யேல் ஆசீர்வாதம், றீகன் மோரீஸ், ஜியோ கிளிட்டஸ், ஜஸ்டின் பிரபு, ஜோவின் ஸ்டீபன் மற்றும் பலர் இணைந்து திருப்பலி நிறைவேற்றுகின்றனர். மாத்திரவிளை மறை வட்டத்தை சேர்ந்த 23 பங்குகளிலிருந்தும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறைமக்களும், புனித தேவசகாயம் பக்தர்களும் இத்திருப்பலியில் கலந்து சிறப்பிக்கின்றனர்.

    விழா ஏற்பாடுகளை வட்டார முதல்வர் மரிய வின்சென்ட் தலைமையில் அருட்பணியாளர்கள் கில்பர்ட் லிங்சன், ஷிஜின், வட்டார மேய்ப்பு பணி பேரவை துணைத்தலைவர் ஜான் கென்னடி, செயலா ளர் வழக்கறிஞர் மரிய அருள்தாஸ், விழாக்குழு உறுப்பினர்கள் ஜஸ்டின், ஜஸ்டஸ், போஸ்,ஜெனிட் டஸ், மரிய ரெத்தி னம் மற்றும் அனைத்து பக்த சபைகள், இயக்கங்கள், அன்பியங்கள், வட்டார அருட்சகோதரிகள் இணைந்து செய்து வரு கின்றனர்.

    ×